அரசு மருத்துவர்கள் பிரைவேட் கிளினிக் வைக்கத் தடை..!
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் கிளீனிக் வைக்க தடை விதித்து தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்ந்த மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்கக்கூடாது என தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.






