தீக்குளிக்க முயன்ற நபரை காப்பாற்றிய பெண் காவலர்..!
திருவண்ணாமலை அருகே செங்கம் பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற நபரை பாய்ந்து சென்று கடமை உணர்வு தவறாமல் பெண் காவலர் ஒருவர் தடுத்த நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.
பெண் காவலரின் மொழி மற்றும் உயிரை காப்பாற்றும் தவிப்பு, பதற்றம் , போராட்ட குணம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. அந்த காட்சிகள் அத்தனை எளிதில் கடந்து செல்ல முடியாது. அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.






