முன்னாள் காதலனால் சிக்கிய பெண் வழக்கறிஞர்..!
நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக கூறிமிரட்டி வந்த முன்னாள் காதலன் மீது பெண் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் பெண் ஒருவர் ஜெய்கணேசன் என்பவரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி ஜெய் கணேஷ், பணம் கேட்டு மிரட்டியதுடன் பாலியல் இச்சைக்கும் இணங்க மிரட்டியதாக சொல்லப்படுகிறது.





