--- --:--:-- --

கல்லால் தாக்கியதால் விவசாயி உயிரிழப்பு!

Untitled-3 copy

சேலத்தில் விவசாயி ஒருவர் பட்டப்பகலில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள விவசாயி முனுசாமிக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

 

மூத்த மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாததால் அன்னதானப்பட்டி தனது இரண்டாவது மனைவியுடன் அவர் வசித்து வந்தார் . .கன்னங்குறிச்சி பகுதியில் 80 சென்ட் நிலம் தொடர்பாக முதல் மனைவியின் இரண்டு மகன்களுக்கும், முனுசாமிக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தனது நிலத்தை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முனுசாமி பாப்பான் தோப்பு என்கிற பகுதியில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon