அரசுப் பள்ளிக் கட்டிடங்கள்கூட, தி.மு.க ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை – அண்ணாமலை
திருச்சியில் ரூ.30.05 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசுப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் அமரும் பெஞ்ச் உள்ளிட்டவை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பள்ளி திறப்பதற்கு முன்பே இந்த சம்பவம் நடந்ததால் மாணவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சிறு குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் கூட திமுக ஆட்சியின் ஊழலில் இருந்து தப்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.






