திருச்சியில் 4 நகைக் கடைகளில் அமலாக்கத்துறை சோதனை..!
சென்னையை தொடர்ந்து திருச்சியில் நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இரண்டாவது நாளாக நகைக்கடைகளில் சோதனை நடத்தப்படுகிறது.
திருச்சியில் உள்ள ஜாபர் ஷா தெருவிலுள்ள ரூபி ஜுவல்லரி உள்ளிட்ட மூன்று கடைகளிலும், பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா ஜெயின் நகைக்கடையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆறு கார்களில் அமலாக்க துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.






