--- --:--:-- --

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்கு விரைவில் தேர்தல்! பொறுப்பு பேராயர் திமோத்தி ரவீந்தர் பேட்டி.!

1000073986

சிஎஸ்ஐ, தென்னிந்திய திருச்சபை மண்டலமான கோயம்புத்தூர் திருமண்டலத்தின் பேராயாரும், திருவனந்தபுரம் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயருமான திமோத்தி ரவீந்தர், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு பொறுப்பு பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலத்திற்கு தேர்தல் நடைபெறும் வரை இவர் தான் பொறுப்பாளர்.

இந்த நிலையில், தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் முழுவதுமாக ஆன்மிகம் பெற்று முதிர்ச்சி அடைய வேண்டும். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு தேர்தல் நடைபெறும் வரை நான் தான் பொறுப்பாளராக இருப்பேன்.
தேர்தல் குறித்த நேரத்தில், நாள், இடம் விரைவில் அறிவிக்கப்படும். ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக சேர்ந்து கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும், அன்பு செலுத்த வேண்டும் என்றார். மேலும், இவர் 24 பேர் கொண்ட பேராயர்களின் கவுன்சில் செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Right Menu Icon