சாலை வசதி இல்லாததால் 20 கிலோமீட்டர் தூரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற அவலம்..!
சாலை வசதி இல்லாததால் 20 கிலோ மீட்டர் தூரம் டோலியில் வைத்து கருவுற்ற பெண்ணை மருத்துவமனைக்கு சுமந்து சென்ற சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது. கருவுற்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அந்த பெண்ணை டோலியில் வைத்து 20 கிலோ மீட்டர் தூரம் வரை மருத்துவமனைக்கு சுமந்து சென்றுள்ளனர்.
இதன் பின்னர் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.






