தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாதீர்கள்: கார்கே
தமிழக எம்.பி.க்களை நாகரிகம் இல்லாதவர்கள் என்று கூறிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், தமிழர்களின் சுயமரியாதையை புண்படுத்திய தர்மேந்திர பிரதானின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது என்றார். பொதுமக்களை பிளவுப்படுத்தும் வகையில் அமைச்சரின் பேச்சு இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




