கருப்பு பூஞ்சை பாதிப்பால் கண்ணை அகற்றிய மருத்துவர்கள்..!
ஓசூரில் கூலி தொழிலாளி ஒருவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூகண்டபள்ளியை சேர்ந்த 46 வயதான கூலித் தொழிலாளிக்கு கண் பார்வை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது செய்த சோதனையில் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருந்தது உறுதியானது. உடனடியாக அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கண்கள் முழுமையாக அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




