--- --:--:-- --

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வெளுக்கப் போகும் கனமழை..!

1

மிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையில் திரிகோணமலை – யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Right Menu Icon