கொடுமை.. 12 வயது சிறுமிக்கு ஹார்ட் அட்டாக்..!
தெலங்கானாவில் 12 வயது சிறுமிமாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த நிவ்ரிதி என்ற அந்த சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது குளித்து விட்டு வந்த அவர், திடீரென நிலைக்குலைந்து கீழே விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.






