பாடம் நடத்தும் போது ஆபாசமாகவும், கொச்சையாகவும் பேசியதாக ஆசிரியர் மீது புகார்..!
கரூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் என்பவர் பாடம் நடந்தபோது ஆபாசமாகவும், கொச்சையாக பேசியதாக கூறி புகார் எழுந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் பன்னீர்செல்வம். இவர் அறிவியல் மற்றும் கணக்கு படங்களை எடுத்து வருகிறார்.
இவர் கடந்த 15ஆம் தேதி ஆபாசமாகவும், கொச்சையாகவும் பேசியதாக அரசு ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.






