விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு..!
நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏக்கருக்கு ரூபாய் நாற்பதாயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் என்எல்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே முப்பதாயிரம் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதால் மீதித் தொகை நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இழப்பீடு தொகைக்கான காசோலைகளை சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






