பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல்வர்..!
கொரொனா பூஸ்டர் தடுப்பூசியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் செலுத்திக் கொண்டார். தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி போடும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசியை முதலமைச்சர் செலுத்திக் கொண்டார். ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி குத்திக் கொண்ட நிலையில் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளார்.






