--- --:--:-- --

இந்திய திரைப்பட இசை உலகிற்கு பேரிழப்பு – ஜானகி மறைவுக்கு இளையராஜா இரங்கல்

10

பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எஸ். ஜானகி அம்மாவின் மறைவு இந்திய திரைப்பட இசை உலகிற்கு பேரிழப்பாகும்.

 

 

தனது அபாரமான குரலாலும், தனித்துவமான பாடும் திறமையாலும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை வாழ்நாள் முழுவதும் நிரூபித்தவர் ஜானகி. வாழ்க்கையில் எத்தனையோ தாங்க முடியாத வேதனைகளை அமைதியாகத் தாங்கிக் கொண்டு வாழ்ந்த மகத்தான கலைஞர் அவர். இசைப் பேரரசி ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon