ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை..!
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தலைமைச் செயலாளர் இறையன்பு சுகாதாரத்துறை செயலாளர் விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் போது அங்கு வரும் 28ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறைவடையும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பன குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதற்குப் பிறகு கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில் இதர மாவட்டங்களுக்கும் அறிவிக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும்.





