செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாட்டில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரூ. 397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.





