செங்கல்பட்டு சாலை விபத்து.. ரூ. 2 லட்சம் நிதி உதவி..!
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் லாரி மோதி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
தலா 2 லட்சம் ரூபாயும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். சாலையை கடக்க முயன்ற பொழுது இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.






