தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர் மழையால் பவானிசாகர் அணை நிரம்பி வரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்துள்ளது. காளவாசல், கோச்சடை, தத்தகிரி, கூடல்புதூர், அரசரடி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் கனத்த மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







