ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார் எனக்கூறிய செல்லூர் ராஜு..!
ஆளும் கட்சி எதிர்க்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும் அதிமுக மக்களின் நலனுக்காக போராடும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த பின்னர் அவரிடம் பேசிய அவர் கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அதிமுக அரசு செய்தது போல திமுக அரசு செயல்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் முதலமைச்சராக சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார் எனவும் தெரிவித்தார்.






