பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: புதிய அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் மாணவர்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதில், தினமும் காலையில் மாணவர்களுக்கு உணவுகள் தாமதமின்றியும், தரமானதாகவும் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திங்கள் அன்று உப்புமாவிற்கு பதில் பொங்கல், காய்கறி சாம்பார் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






