உடுமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை!
உடுமலை அடுத்துள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குறுமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருவதால் தற்பொழுது பஞ்சலிங்க அருவியில் தடுப்புகளை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகின்றது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி தற்பொழுது பஞ்சலிங்க அருவியில் 3வது நாளாக கோவில் நிர்வாகம் சார்பில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.





