மின்சார ஸ்கூட்டர்களுக்குத் தடை..!
மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பற்றியதில் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படும் வரை புதிய மாடல் மின்சார ஸ்கூட்டரை சந்தையில் வெளியிட வேண்டாம் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
தரக்கட்டுப்பாட்டுகளை உறுதி செய்வதில் கவனமாக செயல்பட மின்சார நிறுவனங்களுக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்திருந்தார். இதையடுத்து ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்றன.





