பாமக நகர செயலாளர் கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்..!
பாமக நகர செயலாளர் கொலை வழக்கில் ஏற்கனவே சூர்யா உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட பாமக நகர செயலாளர் நாகராஜ் மூன்று தினங்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளியான அன்வர் உசேன் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.






