ஆதாருடன் பான் எண் இணைப்பதற்கான கெடு நீட்டிப்பு
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை வரும் 31ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது.
முன்னதாக பான் என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதி முடிவதாக இருந்தது. எனினும் பலர் இரண்டையும் இணைக்க தவறியதால் அவர்களுக்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பான் என்னுடன் ஆதார் எண்ணை வரும் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அதன் இணையதளத்தில் லிங்க் ஆதார் என்ற பகுதிக்கு சென்று பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் பதிவிட்டால் இணைப்பு பணி முடிந்துவிடும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




