மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்து விபத்து..!
நெல்லை மாவட்டம் அம்பை அருகே வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொபைல் கடை நடத்தி வரும் ராமராஜன் என்பவர் தனது வீட்டிற்கு வெளியே மின்சார வாகனத்தை நிறுத்திவிட்டு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது வாகனம் திடீரென புகையுடன் தீப்பற்றி எரிந்த நிலையில் தண்ணீர் ஊற்றி அணைத்த போது அதன் பேட்டரியும் வெடித்ததாக கூறப்படுகிறது.





