நடு ரோட்டில் மதுபோதையில் பெண் செய்த அட்ராசிட்டி..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மது போதையில் இருந்த பெண் போலீசாரை பார்த்ததும் காக்கா வலிப்பு வந்தது போல் நடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
தள்ளாடியபடி கிடந்த பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் கை தாங்கலாக போலீசார் பிடித்து வந்தனர். ஆம்புலன்சுக்கு போலீசார் அழைப்பு விடுத்த நிலையில் அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடினார்.





