சித்தி 2 சீரியலில் இருந்து விலகியுள்ள நடிகை ராதிகா..!
தொண்ணூறுகளின் இறுதியில் ராடான் நிறுவனம் தயாரித்த சித்தி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால் சென்ற வருடம் சித்தி 2 தொடரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவி, ஜெயலட்சுமி , காயத்ரி உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் ராதிகா சரத்குமார் இந்த தொடரில் இருந்து விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராதிகா அப்போது விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என்று ராதிகா தெரிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது.






