பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வயது வரம்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் : நடிகை அம்பிகா
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வயது வரம்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை அம்பிகா சென்னை காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து சமூக வலைதளங்களில் அம்பிகா கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் பாலியல் குற்றங்களில் உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ இருந்தாலும் அந்த குற்றங்கள் கண்டிப்பாக உடனடியாக தண்டிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் நபராக இருந்தாலும் சரி நூறு வயது உடையவர்களாக இருந்தாலும் சரி குற்றம் குற்றமே என கருத்து தெரிவித்துள்ளார்.






