ஒரு கிராம் விஷத்தை ஏழு லட்ச ரூபாய்க்கு அதிபர் ஆன இளைஞர்..!
எகிப்தில் பட்டப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு பாலைவனத்தில் தேள்களை பிடிக்க தொடங்கிய இளங்கலை மாணவர் 25 வயதில் மருந்து நிறுவனத்தின் அதிபர் ஆனார்.
தேளில் விஷத்தால் தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்துகளுக்கு மேலைநாடுகளில் அதிகமாக மௌஸ் உள்ளதை அறிந்த முகமது என்பவர் பாலைவனங்களில் தேள்களை பிடிக்கத் தொடங்கினார். பின்னர் அவற்றை சேகரித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளார்.
தங்களது பண்ணைகளில் எண்பதாயிரம் தேள்களை பராமரிக்கும் அவர் ஒரு கிராம் விஷம் ஏழு லட்ச ரூபாய் பணத்திற்காக விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.






