குறுகிய சந்தில் வேகமாக வந்து டிராக்டர்.. குழந்தை மீது ஏறி இறங்கியதால் பரிதாப பலி..!
பெங்களூரில் நான்கு வயது சிறுவனான புகழ் தனது சகோதரனுடன் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளான். குகனும் அவனது சகோதரனும் ஒரு குறுகிய சந்தில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது எதிரே தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் வந்ததால் ஒதுங்க முயற்சித்துள்ளார்.
அப்பொழுது சாலையோரம் கொட்டி கிடந்த ஜல்லிக்கல் மீது நடக்கும் பொழுது கால் இடறி குகன் கீழே விழுந்தான். இந்த சம்பவத்தில் தண்ணீர் டேங்கரின் பின்பக்க சக்கரம் சிறுவன் குகனின் மீது ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்தான். சிறுவன் டயரில் சிக்கியதை கவனிக்காமல் டிரைவர் தொடர்ந்து டிராக்டர் ஓட்டி சென்றுள்ளார். பின்னர் அந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார்.






