போதை மாத்திரையை வித்தியாசமாக பயன்படுத்திய நபர்..!
சென்னை வியாசர்பாடியில் போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடலில் ஏற்றிக் கொண்டதாக கூறப்படும் சத்தியநாராயணன் என்ற 24 வயது இளைஞர் உயிரிழந்தார்.
வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த அந்த இளைஞர் போதைக்கு அடிமையானவர் என்று தெரிவித்த போலீசார் அவருக்கு போதை மாத்திரைகளை வழங்கியது யார்? அவர் நண்பர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருவதாகவும் கூறினார்.





