ரயில் தண்டவாளத்தில் ஸ்லீப்பர் கிளிப்களை திருடும் நபர்..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ரயில் தண்டவாளம் ஸ்லீப்பர் கிளிப்புகளை திருடி சென்றனர். ஸ்லீப்பர் கிளிப்களுடன் ரயில் தண்டவாளத்தை இணைக்க இந்த கிளிப்புகள் பொருத்தப்பட்டிருக்கும்.
சாத்தூரில் இருந்து மதுரை செல்லும் ரயில் தண்டவாளத்தில் சுமார் 200 மீட்டர் தொலைக்கப் பொருத்தப்பட்டிருந்த 150 ஸ்லீபர்களுக்கு அடையாளம் தெரியாத ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார்.
திருட்டு குறித்து ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிளிப்புகளை ஒருவர் திருடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.





