லாரி மோதிய விபத்தில் செவிலியர் ஒருவர் உயிரிழப்பு..!
கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சுமித்ரா என்பவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் செவிலியர் சுமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.





