பூங்காவிற்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை..!
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நள்ளிரவில் உலா வந்த கருஞ்சிறுத்தையால் பரபரப்பு நிலவியது. பூங்கா நுழைவு வாயில் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்த நிலையில் வாகனங்கள் வருவதை கண்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது.
சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.





