அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் – பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்..!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகரித்து வரும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் பஞ்சாபில் அதிகரித்து வருகிறது.
அங்கு நாள் ஒன்றுக்கு 45 பாலியல் வழக்குகள் பதிவாகி வரும் நிலையில் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு மிகப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதனால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக பஞ்சாப் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.






