பேருந்தின் ஜன்னலில் தொங்கியபடி சாகசம் செய்த மாணவர்கள்..!
சென்னையில் பேருந்தின் ஜன்னலோரம் தொங்கியபடி சாகசம் செய்து மாணவர்கள் பயணிப்பது தொடர்கதையாகியுள்ளது. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் சென்ற பேருந்து ஒன்றில் தனியார் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்தனர்.
அவர்கள் ஜன்னல் மீது ஏறிக்கொண்டு சாகசம் செய்தது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.





