ஆம்புலன்ஸில் செம்மரக்கட்டைகள் கடத்திய கும்பல் ..!
ஆந்திராவில் இரு வேறு இடத்தில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சித்தூர் வேலூர் நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த ஆம்புலன்சை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் செம்மரக்கட்டைகளையும், சந்தேகத்திற்கிடமாக இருந்த 11 பேரையும் மீட்டனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பகுதியில் நடைபெற்ற வாகன தணிக்கையில் பொழுது சிறிய ரக சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 36 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.





