மின்கம்பியை உரசிய பேருந்து…உயிர்தப்பிய பயணிகள்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தாழ்வாக சென்ற மின் கயிறு மீது பேருந்து உரசியதில் மின் வயர் அறுந்து விழுந்து நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர். தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
பேருந்து உரசியதில் மின் கம்பி சரிந்து விழுந்தது. இருப்பினும் மின்கம்பிகள் அறுந்து விழும் பொழுது அருகில் யாரும் இல்லாததால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் என்ற பலர் உயிர் சேதமும் இல்லாமல் தடுக்கப்பட்டது.






