தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்!
கர்நாடக மாநிலத்தில், கல்லூரி மாணவிகள் ஹிஜாப் உடை அணிவதற்கு தடை ஏற்படுத்திய கர்நாடக மாநில அரசை கண்டிக்கும் வகையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பெண்கள் தேசிய கொடி வண்ணத்திலான உடை அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், பள்ளி, கல்லூரி குழந்தைகள் உட்பட சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி செல்லும் சிறுமிகள், பெண்கள் என பலரும் தேசியக்கொடி வண்ணத்தில் ஹிஜாப் அணிந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.






