5 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வாழ்க்கையை பற்றி கூறிய பாவனா..!
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நடிகை பாவனா 5 ஆண்டுகளாக தான் சந்தித்த வலிகள் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார். பிரபல நடிகையான பாவனாவை கடந்த 2017 ஆம் ஆண்ட மர்ம கும்பல் ஒன்று கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நிகழ்வு காரணமாக மலையாள நடிகர் திலீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது எளிதான பயணம் அல்ல. விக்டிம் ஆக இருந்து சர்வைவர் ஆக மாறிய பயணம். என் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ஆண்டுகளாக இருந்த பெயரும் அடையாளமும் நசுக்கப்பட்டது. குற்றம் செய்தது நான் இல்லை என்ற போதும் என்னை அசிங்கப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்ததாகவும் கூறியுள்ளார்.






