கடித்த பாம்புடன் மருத்துவமனை சென்ற விவசாயி..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தன்னைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து மருத்துவமனைக்கு சென்ற விவசாயிகள் பரபரப்பு ஏற்பட்டது. ராசிபுரம் அடுத்த பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா என்பவர் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை சுமார் நான்கடி நீளம் கொண்ட கட்டு விரியன் பாம்பு கடித்தது. மருத்துவமனை சென்றால் என்ன பாம்பு என்று கேட்பார்கள் என்பதை உணர்ந்து அச்சமில்லாமல் தன்னைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
இதனை பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள் அச்சமடைந்தனர்.






