சூரத் நகரில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து..!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் நகர பேருந்து ஒன்று பங்கிலா பார்க் அருகில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு குதித்து உயிர் தப்பினர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் நடுரோட்டில் பேருந்து முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்தது. தீயினால் அந்த பகுதியில் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது.






