மணமகளை வைத்து தங்க ஆபரண நகை விளம்பரங்கள் எடுக்க வேண்டாம்..!
மணமகளை வைத்து தங்க ஆபரண நகை விளம்பரங்கள் எடுக்கப்பட வேண்டாமென கேரள ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். வரதட்சணை கொடுமை காரணமாக பெண் கேரளாவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து வரதட்சணை வாங்க மாட்டோம் என அரசு ஊழியர்கள் உறுதிப் பத்திரம் அளிக்க வேண்டும் என அந்த மாநில முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் மாணவர்களை வைத்து நகை விளம்பரம் எடுக்கப்பட வேண்டுமென கேரள ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருமணம் மற்றும் மணமகள் அதே வைத்து எடுக்கப்படும் விளம்பரங்கள் வரதட்சணையை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால் இந்த கருத்தினை பதிவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.







