பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு..!
மதுரை மேலூரில் பட்டப்பகலில் வீட்டின் சுவர் ஏறி குதித்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயன்ற நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அண்ணா நகர் பகுதியில் மதியம் 2.55 மணிக்கு 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பின்பகுதியில் சுவர் ஏறி குதித்து வீட்டிலிருந்தவரை கத்தியால் மிரட்டியவர் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






