மதுரையில் கள்ளக்காதலி வீட்டில் இளைஞர் தூக்குப் போட்டு தற்கொலை..!
மதுரையில் கள்ளக்காதலி வீட்டில் இளைஞர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் சிவசக்தி. ஓட்டலில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரின் மனைவி சுப்புலட்சுமி. இவருக்கு செல்வகுமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் சிவசக்தி மனைவியை கண்டித்திருக்கிறார். ஆனால் மனைவி தகாத உறவை கைவிட மறுத்த விரக்தியில் சில நாட்களுக்கு முன்பாக சிவசக்தி விஷம் குடித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் ஆகி வந்த பொழுது தன் மனைவி அவரின் கள்ளக்காதலன் செல்வகுமார் உடன் இருப்பதை கண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.





