அசாமில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..! மக்கள் அச்சம்.!
அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் கோல்பாரா பகுதியை மையமாகக் கொண்டு 14 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நிலநடுக்க மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பக்கத்து மாநிலங்களான மேகாலயா, மேற்கு வங்காளத்தில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.






