இரட்டை தலை, மூன்று கைகளுடன் பிறந்த பெண் சிசு..!
ஒடிசா தனியார் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு இரட்டை தலையுடனும், மூன்று கைகளுடனும் பெண் சிசு பிறந்துள்ளது.
சந்திரபா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பீகார் மாநிலம் ராஜ் நகரை சேர்ந்த அம்பிகா என்ற பெண்ணுக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்த போது இரட்டை தலை மற்றும் மூன்று கைகளுடன் பெண் சிசு பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்ட நிலையில் தற்போது பெண்சிசு நலமுடன் இருப்பதாகவும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மருத்துவ செலவுக்கு பெற்றோர் அரசிடம் உதவி கரம் நீட்டி உள்ளனர்.






