நாளையுடன் நிறைவடைகிறது சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை..!
சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை நாளையுடன் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பிரதான கட்சிகளான அதிமுக, திமுக பரப்புரையை தொடங்கிய நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சியினர் என ஐந்து முறை போட்டி நிகழ்ச்சி நிகழ்கிறது. நாளை இரவு 7 மணியுடன் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்,







